10 வாவிகள் வற்றிப்போயுள்ளன
வறட்சியினால் நாடுமுழுவதிலும் உள்ள 10 சிறிய வாவிகள் வற்றிப்போயுள்ளன என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால், பல மாவட்டங்களில் நெல் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது...
விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை விரைவில் நிறுவ நடவடிக்கை
விளையாட்டுத் துறையில் தேர்ச்சியுடன் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் உத்தேச விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நடவடிக்கை எடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன...
நீர்கொழும்பு துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...
நேர அட்டவணையின் அடிப்படையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை
வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய உதவி பொது...
ரஷ்யாவில் இரு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன
ரஷ்யாவில் இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.யுக்ரைன் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தும் என சந்தேகிக்கப்படும் பகுதிகளில் அமைந்துள்ள இரண்டு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
போலி விசாவைப் பயன்படுத்தி பிரான்ஸ் செல்ல முயன்றவர் கைது
போலியான வீசாவைப் பயன்படுத்தி துபாய் ஊடாக பிரான்ஸ் செல்ல முயன்ற நபர் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த...
தட்டுப்பாடு நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி
தட்டுப்பாடு நிலவிய 14 வகையான மருந்துகளை நாட்டிற்கு இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதன் மூலம் நாட்டில் நிலவிய மருந்து தட்டுப்பாடு 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இந்திய கடனுதவி திட்டத்தினூடாக நூற்றுக்கும்...
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை
வீடுகள் அல்லது பணியிடங்களில் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரியுள்ளது.சுத்திகரிப்புக்காக நீர் பெறும் ஆதாரங்களில் நீர் வற்றிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வறட்சியான காலநிலையினால் 20 நீர் விநியோக...
கொழும்பில் பலத்த பாதுகாப்பு
இன்று (11) பிற்பகல் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினரைப் பயன்படுத்தி விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மீரிகம விபத்து: சமிக்ஞை கட்டமைப்பில் 5 இலட்சம் ரூபா நட்டம்
மீரிகம – வில்வத்த பகுதியில் உரத்தை கொண்டு சென்ற லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அங்குள்ள சமிக்ஞை கட்டமைப்பில் மாத்திரம் 5 இலட்சம் ரூபா மதிப்பிலான நட்டம் ஏற்பட்டுள்ளது.எனினும் ரயிலின் இயந்திரத்தில்...
Popular
