Friday, August 1, 2025
27.2 C
Colombo

செய்திகள்

கட்டுப்பணத்தை செலுத்தினார் திலித் ஜயவீர

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. அதன்படி அவர் சார்பில் டொக்டர் ஜி. வீரசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

வெள்ளி முதல் இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று இந்த பயணிகள் படகு சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஆன்லைன் மூலம்...

சூடானில் இடம்பெற்ற தாக்குதலில் 28 பேர் பலி

சூடானில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எல் பாஷர் பிரதேசத்தில் ஆா்.எஸ்.எப் துணை இராணுவப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 28 போ்...

ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக 32 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று 05 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

156 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் 156 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின்...

இன்றும் பல பகுதிகளுக்கு பலத்த மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று (13) 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான...

பேருந்து விபத்தில் இருவர் பலி

பண்டாரகம - கஸ்பேவ வீதியில் இபோச பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். பண்டாரகம - கஸ்பேவ வீதியில் வல்மில்ல கல்கடே சந்திக்கு அருகில் குறித்த பேருந்து வீதியை விட்டு...

தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நேற்று (11) வரை 337...

லொறி – முச்சக்கரவண்டி விபத்து: குழந்தை உட்பட மூவர் பலி

கொழும்பு - கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீது முச்சக்கரவண்டி ஒன்று மோதி, இந்த...

அவுஸ்திரேலியாவில் ஹெலிகொப்டர் விபத்து: ஒருவர் பலி

அவுஸ்திரேலியாவின் வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள கேன்ஸில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகிள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்துள்ளதுடன், சம்பவத்தின் போது அவர் மட்டும் விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இன்று...

Popular

Latest in News