Sunday, May 17, 2026
26.1 C
Colombo

செய்திகள்

IOC எரிபொருள் விலை அதிகரிப்பு?

சந்தையில் எரிபொருள் விலையை உயர்த்துவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என IOC தெரிவித்துள்ளது.அதன் பேச்சாளர் ஒருவரிடம் நாம் வினவியபோது, ​​எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டேன் பிரியசாத் கைது

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பங்கள் தொடர்பில் நவ சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் அவர்...

இலங்கைக்கு 160 மில்லியன் டொலர்கள் கிடைத்தது

உலக வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பெற்றோல் இல்லை, மன்னிக்கவும்!

அடுத்த 2 நாட்களுக்கு பெற்றோல் கிடைக்காது என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.எனவே வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.எனினும், தற்போது நாடு முழுவதும் டீசல் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படுவதாகவும்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

பலப்பிட்டிய - படபொல - மானம்பிட்ட பிரதேசத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்த போது,பிறிதொரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், வீட்டின் உரிமையாளர்...

எம்.பிகளுக்கு பொலிஸிடமிருந்து எரிபொருள்

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி காரணமாக நாரஹேன்பிட்டி பொலிஸ் போக்குவரத்து பிரிவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் MPகளுக்கு எரிபொருளை வழங்குமாறு சபாநாயகர் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன், பணத்தை பெற்றுக்...

O/L மாணவர்களுக்கான அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை வகுப்புகள்,...

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் கடும் வாகன நெரிசல்

எரிபொருள் கோரி பொதுமக்கள் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு வீதி போக்குவரத்து சுகததாஸ உள்ளக அரங்குக்கு முன்னால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வரிசையில் நிற்க வேண்டாம்! – CPC

இன்றைய தினம் பெற்றோல் விநியோகம் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க பொதுமக்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்.எனவே, பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கனியவளக் கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்த நிலையில்,...

Popular

Latest in News