வருமானம் குறைந்தோருக்கு நிவாரணம்
வருமானம் குறைந்த 61,000 குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை வழங்க இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மேலதிக கொடுப்பனவு
கர்ப்பிணிப் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 20,000 ரூபாவுக்கு மேலதிகமாக 2500 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்குவதற்கான யோசனையொன்றை முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
IMF உடனான கலந்துரையாடல் வெற்றியளித்துள்ளது – ஜனாதிபதி
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தினை நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
VAT வரி அதிகரிப்பு
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (VAT) 15 ஆக உயரும் எனவும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யும் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.நாடாளுமன்றில் இடைக்கால வரவு...
ஓய்வூதியம் பெறும் வயதெல்லை 60 ஆக குறைப்பு
ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வயதெல்லையை 60 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.திருத்தப்பட்ட இடைகால பாதீட்டு யோசனையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் வயதெல்லை 65 வரை அதிகரிக்கப்பட்டமையினால், தொழில் வாய்ப்புக்கள் அற்றோரின்...
MPகளின் வீடுகளை மறுசீரமைக்க 4000 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
சிறுவர் போஷாக்கு குறைபாட்டின் அடிப்படையில் இலங்கை உலகில் 6 ஆவது இடத்திற்கு வந்துள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை மறுசீரமைக்க அரசாங்கம் 4000 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயம்
வலப்பனை மஹ ஊவா பிரதேசத்தில் பேருந்து ஒன்று வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான 6 பேர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மட்டக்களப்பிலிருந்து திருமண...
பாண் இறாத்தலின் விலை 300 ரூபா?
சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு நிலவுவதால் எதிர்காலத்தில் பாண் ஒரு இறாத்தல் 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.டொலர் நெருக்கடியால் கோதுமை மா இறக்குமதியை நிறுவனங்கள்...
இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றில் சமர்பிக்க அனுமதி
இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் ஒரு மணிக்கு இடைக்கால பாதீட்டு உரையை ஆற்றவுள்ளார்.பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை...
உலக செல்வந்தர் பட்டியலில் 3 ஆவது இடத்தில் கௌதம் அதானி
இந்திய செல்வந்தர் கௌதம் அதானி, பிரான்ஸின் பெர்னார்ட் ஆர்னல்ட்டை பின்தள்ளி உலக செல்வந்தர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் அதானி குழுமம் கால்பதித்து...
Popular
