Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (04) இரவு 7.00 மணி முதல் நவம்பர் 05 ஞாயிற்றுக்கிழமை காலை 5.00 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தல நீர் விநியோகத்தை மேம்படுத்தும் ஆற்றல் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய முன்னேற்றப் பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுலாகவுள்ளது.

Keep exploring...

Related Articles