பொசொன் வாரம் ஆரம்பிக்கப்பட்ட 3 நாட்களில் நாடளாவிய ரீதியாக வாகனத் திருட்டு, கொள்ளை மற்றும் சொத்தை அபகரித்தல் போன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வீடுகளை உடைத்து களவாடுதல் மற்றும் சொத்துக்களை அபகரித்தல் போன்ற சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.
இதுதவிர, வாகன கொள்ளை தொடர்பில் நாடளாவிய ரீதியாக உள்ள பல காவல்துறை நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
