உடனடி கடன் வழங்குவதாக கூறி இணையத்தளம் ஊடாக அறிவித்தல்களை விடுத்து, இலட்சக்கணக்கான நிதியை மோசடி செய்த ஒருவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, கெஸ்பேவ, ராகமை, வெயங்கொடை, கேகாலை, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்து அவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய சந்தேகத்துக்குரியவர் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் கந்தானை பகுதியைச் சேர்ந்தவராவார்.
கைதானவரிடம் இருந்து 74 சிம் அட்டைகள் 4 கையடக்க தொலைபேசிகள், என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
