மன்னார் – பேசாலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கரிசல் கிராமத்தில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 25 வயதான ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் விசேட அதிரடி படையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசேட அதிரடிபடையின் சிலர் சிவில் உடையில் அங்கு சென்றிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.