ஜப்பானின் இஷிகாவா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பூமிக்குள் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக நாகானோ மற்றும் கனாசாவா இடையேயான ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
மண்சரிவு அபாயம் ஏற்படலாம் என நாட்டின் அனர்த்த திணைக்களம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
