அடுத்த வருடத்திற்கான அரச சேவைக்கு ஆட்சேர்ப்புகள் இல்லை என நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வருவாயை சேகரிப்பதற்காகவும், செலவை குறைப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கைகள் ஒன்றை அரச நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இச்சுற்றறிக்கையின் படி, புதிய அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்யக் கூடாது எனவும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.