கடந்த ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணம் சுமார் 50% ஆல் விரைவில் குறைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்படும் என பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், நீர்மின் உற்பத்தியின் இலாபத்தை மக்கள் பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கை மின்சார சபை இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.