இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் இரண்டாவது தவணைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (12) அங்கீகாரம் வழங்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
இந்த விடயத்தினை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நேற்று (11) அமைச்சரவைக்கு ஜனாதிபதி இதனை அறிவித்ததாக இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.