இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 27 துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட்ட காவல் துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.
இதற்கமைய 27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் துப்ப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து காவல் துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
