நாடாளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமாகவும், தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றிய குஷானி அனுஷா ரோஹணதீர, நாடாளுமன்றத்தின் புதிய செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடன் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த புதிய நியமனத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய தம்மிக்க தசநாயக்க ஓய்வு பெற்றதையடுத்து அவர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.