இலங்கையிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அரசு ஏற்கனவே ஆரம்பித்துள்ளது.
இதேவேளை, விவசாயிகளின் நெல் கையிருப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கிடைக்குமாயின் அவற்றை அரிசியாக மாற்றி மேலும் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி விவசாய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.