நாளை முதல் மீண்டும் மழையுடனான வானிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
