250 கோடி ரூபாவை மோசடி செய்த திலினி பிரியமாலி விவகாரத்தில் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும், 33 பில்லியன் ரூபாவை மோசடி செய்த ETI வழக்கில் இதுவரை சட்டம் அமுல்படுத்தப்படவில்லை என நுவுஐ வைப்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் ETI வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன அமைப்பின் தலைவி அனுஷா ஜயந்தி கருத்து தெரிவித்தார்.
அத்துடன், வைப்பாளர்களின் பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.