Monday, February 9, 2026
25 C
Colombo

செய்திகள்

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயம்

பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயமடைந்துள்ளார்.ரயிலின் மிதிபலகைக்கு அருகில் இருந்து அவர் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கனேமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.காயமடைந்தவர் ராகம...

பங்களாதேஷ் பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பு இன்றைய தினம் (10) புதுடெல்லியில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸ் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோன் ( Emmanuel Macron) அந்த நாட்டு பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.இதன்படி எதிர்வரும் 30ஆம் திகதி பிரான்ஸில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

பொசொன் பண்டிகை காலத்தில் விசேட பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இதன்படி கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு குறித்த பேருந்து...

30 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது

டுபாயில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான 'அஹுங்கல்லே லொக்கு பெட்டி'யின் மூன்று பிரதான சீடர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து நேற்று...

சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்து 2 மாத குழந்தை பலி

ஓமந்தை - புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்று (09) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 2 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.சம்பவத்தின் போது...

மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு

வாத்துவ, பொஹந்தரமுல்ல கடற்கரையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவர் அணிந்திருந்த சட்டையால் அவர் முகத்தை மூடி குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவர் இறக்கும்...

இன்று 20 ரயில் சேவைகள் ரத்து

ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (10) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.இதன் காரணமாக இன்று காலை 20 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும்,நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை...

ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு

துல்ஹஜ் மாதத்திற்கான தலைபிறை இன்று (07) தென்பட்டதை அடுத்து, எதிர்வரும் 17ம் திகதி ஹஜ் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரியவாசல் அறிவித்துள்ளது.இன்று மஃரிப் தொழுகையோடு, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய...

Popular

Latest in News