வர்த்தகர் ஒருவரிடம் இருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றதாக கூறப்படும் வழங்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று (6) தீர்ப்பளித்தார்.
அதற்கமைய, அவருக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.
வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபா கப்பம் பெற்றமை தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி மொரின் ரணதுங்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
