சகல பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் எரிபொருள் அளவை 20 சதவீதத்தால் குறைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன சுற்றுநிருபம் மூலம் இதனை அறிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
