Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உலகம்ஒர்டர் செய்தது கைப்பேசி - வந்தது 5/- சலவை சவர்க்காரம்

ஒர்டர் செய்தது கைப்பேசி – வந்தது 5/- சலவை சவர்க்காரம்

இந்தியா – தெலுங்கானா மாநிலத்தில், இணைய வழியில் கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த நபருக்கு 5 ரூபா மதிப்பான (இந்திய நாணய மதிப்பு) சலவை சவர்க்காரம் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இந்த மோசடி குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலாபாத் மாவட்டம் ஊட்டனூரை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 5 நாட்களுக்கு முன் பொருட்களை விற்பனை செய்யும் தளமொன்றில் 6,100 ரூபா செலுத்தி கைப்பேசி ஒன்றை ஒர்டர் செய்துள்ளார்.

அவருக்கு கிடைத்த பொதியை திறந்து பார்த்த போது, அதில் கைப்பேசிக்கு பதிலாக சலவை சவர்க்காரம் இருந்துள்ளது.

இதுகுறித்து குறித்த நிறுவனத்துக்கு புகார் அளித்தும், அந்நிறுவனம் பதிலளிக்க மறுத்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles