சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வன்முறை சம்பவம் இடம்பெற்ற மாதத்தில் அவரது கையடக்கத் தொலைபேசிகளின் செயற்பாடுகள் பற்றிய பகுப்பாய்வைப் பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் அவரது கைப்பேசிகள் பெறப்பட்டுள்ளன.