நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (25) நீதிமன்றில் முன்னிலையானார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது 70 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த வழக்கு இன்று (25) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி ‘கிரிஷ்’ என்ற நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாவை பெற்று அதனை முறைகேடாக பயன்படுத்தியதாக நாமல் ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.