எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று (14) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 36 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன், வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நாளை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11 மணி வரை நடைபெறவுள்ளது.