Wednesday, March 11, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை வன்புணர்ந்த 17 வயது சிறுவன் கைது

சிறுமியை வன்புணர்ந்த 17 வயது சிறுவன் கைது

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் சிறுவனொருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

17 வயது சிறுவனால் குறித்த சிறுமி வன்புணரப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அச்சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணைகளையடுத்து சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles