Friday, March 14, 2025
27.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதை மாத்திரைகளுடன் இருவர் கைது

போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

சட்டவிரோத போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் விசேட அதிரடிப்படை முகாமின் குழுவினர் நேற்று (09) கோப்பாய் பொலிஸ் பிரிவில் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடத்துவதற்காக 200 போதை மாத்திரகளை வைத்திருந்த செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும், கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles