Saturday, May 31, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பாதுகாப்பாக மீட்பு

நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பாதுகாப்பாக மீட்பு

பாணந்துறை பொலிஸாரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் இணைந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

பாணந்துறை கடற்பரப்பில் நேற்று (13) மாலை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட ஐந்து பேரின் உயிர்கள் இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த ஐவரும் வயோதிப தம்பதியுடன் நேற்று (13) பாணந்துறை கடற்கரைக்கு சென்று நீராடிக் கொண்டிருந்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்கள் திடீரென அலையில் சிக்கி மெதுவாக கடலை நோக்கிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர்கள் உதவிக்காக கூச்சலிட்டுள்ளதுடன், அருகில் இருந்த 2 பொலிஸ் மற்றும் கடற்படை உயிர்காக்கும் வீரர்கள் நீரில் குதித்து அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles