காதார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சுக்கும் இடையில் இன்று (06) கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
பிற்பகல் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் நாளை முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா DAT கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கடந்த முதலாம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அத்துடன், இன்று பிற்பகல் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.