யாழ்ப்பாணத்தில் 14 மாத குழந்தை ஒன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று (05) உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ரகுராம் சந்திரா என்ற 14 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த குழந்தை சுமார் இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்துள்ளது.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.