Thursday, May 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது

திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் கைது

பகலில் வீடொன்றை உடைத்து பணம் மற்றும் தங்க நகையை திருடிய இராணுவ சிப்பாய் ஒருவரை பொல்பித்திகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உடவலவ இயந்திர பொறியியல் படையணியின் இராணுவ சிப்பாய் ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பொல்பித்திகம – தலகொலவெவ – ஹக்வதுனாவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கடந்த 7ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில் ஹக்வத்துனாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை உடைத்து 12,400 ரூபாவும் 3500 ரூபா பெறுமதியான போலி தங்க காப்பு ஒன்றும் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொல்பித்திகம பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சந்தேக நபரான இராணுவ வீரரை கைது செய்தனர்.

கைது செய்யப்படும் போது, ​​சந்தேக நபரிடம் திருடப்பட்ட பணத்தில் இருந்து 2000 ரூபா மீட்கப்பட்டது.

சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் 07 நாட்கள் விடுமுறை பெற்று கடந்த 05 ஆம் திகதி தனது வீட்டிற்கு திரும்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பொல்பித்திகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles