நாட்டில் உள்ள எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு மாதம் நீடிக்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது.
தாய்லாந்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள எரிவாயு தொகுதி இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு முன்னர் எரிவாயு தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
தாய்லாந்தில் இருந்து வருடத்திற்கு 300,000 மெட்ரிக் டன் எரிவாயு இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், தாய்லாந்தில் இருந்து எரிவாயு இறக்குமதி செய்யப்பட்டாலும் தற்போதைய சந்தை விலையில் மாற்றம் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
