சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எவ்வாறெனினும், புலம் பெயர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் முறைக்கான கடன் கடிதங்களை வழங்குவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளது.
திறைசேரி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளினால் கடன் கடிதங்கள் வழங்கல் நீடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.