அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் 2,238 கிராம உத்தியோகத்தர்கள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.
இன்று (27) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு கிராம அலுவலர் பரீட்சைக்கு விண்ணப்பங்களை அனுப்பிய தகுதி வாய்ந்த பரீட்சார்த்திகளுக்கான பரீட்சையை டிசம்பர் 02 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.