இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா ஐசிசியிடம் கோரிக்கை விடுத்து இலங்கை கிரிக்கெட்டை தடை செய்துள்ளதாக ESPNcricinfo இணையத்தளம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா முன்னதாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்இ தனது வலுவான கோரிக்கையின் பேரில் இலங்கைக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி வாய்ப்பளித்ததாக தெரிவித்தார்.
அதனை மேற்கோள் காட்டி ESPNcricinfo, நவம்பர் 21 அன்று ஐசிசி கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா, கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு பிரச்சினையை சரிசெய்ய இலங்கை அரசாங்கத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்குமாறு ஐசிசியிடம் கேட்டுக் கொண்டார் என குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும்,விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, கிரிக்கெட் இடைக்கால குழுவை நியமிக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்குவதற்காக, இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமா கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் ஐசிசியிடம் கோரியுள்ளதாக ESPNcricinfo இணையத்தளம் தெரிவித்துள்ளது.