Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்தலாவ , கஹம்பிலிய புதிய கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வேறு ஒருவருக்கு குறித்த சங்கை விற்பனை செய்ய தயாராகி வருவதாக விமானப்படை புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles