பலப்பிட்டிய- மருதானை பிரதேசத்தில் தொண்டையில் இரண்டு மாத்திரைகள் சிக்கியதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி பலப்பிட்டிய அடிப்படை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (10) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலப்பிட்டிய ரேவத வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.