இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் பல் மருத்துவ பீடங்களுக்கு உட்பட்ட மாணவர் குழுக்களுக்கு இடையில் நேற்று மாலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த மாணவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.