ஹிங்குரங்கொட – ரஜஎல பகுதியில் மாமரத்தின் கிளையை வெட்டச் சென்ற நபர் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
52 வயதான நபN இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 9 மணியளவில் வீட்டில் உள்ள மாமரத்தின் கிளையை வெட்டுவதற்காக மரத்தில் ஏறிய போது சுமார் 15 அடி உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்துள்ளார்.
உயிரிழந்தவர் திருமணமாகாதவர் எனவும் அவரது சடலம் ஹிங்குரங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஹிங்குரங்கொடபொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.