வத்தளை மாபோல நகர சபையின் செயலாளர் மீது கழிவு எண்ணெய் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாதாந்த பொதுக்கூட்டத்தின் போது அடையாளம் தெரியாத நபர்களால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
வத்தளை மாபொல நகர சபையின் இம்மாத பொதுக்கூட்டம் நேற்று (28) வத்தளை மாநகர சபையின் தலைவர் மார்க் குணசேகர தலைமையில் நடைபெற்றது.
இந்த சம்பவத்தினால் பொதுக்கூட்டம் இடைநிறுத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
கழிவு எண்ணெய் தாக்குதலுக்குள்ளான செயலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.