எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
டொலரின் பெறுமதி அதிகரிப்பால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்து பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மே மாதம் முதல் வாரம் வரை போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தேவையானளவு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.