Monday, June 9, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவ பேருந்துக்கு தீ வைப்பு: சந்தேக நபர் கைது

இராணுவ பேருந்துக்கு தீ வைப்பு: சந்தேக நபர் கைது

2022 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கலவரத்தின் போது மிரிஹானாவில் இராணுவத்தினர் பயணித்த பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹியங்கனை புஜாபிட்டிய பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடந்த சனிக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளார்.

காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் ஊடாக அடையாளம் காணப்பட்டமை மற்றும் தொலைபேசி வலையமைப்பு தொடர்பான விசாரணைகளை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles