கலிபோர்னியா – ஒரேன்ஞ் பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் அணிக்கு சொந்தமான மதுபான விடுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.