சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீசியன் லூங்கை (Lee Hsien Loong) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (21) சிங்கப்பூருக்கு பயணமான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி நெங் எங் ஹென் (Ng Eng Hen) ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.