Thursday, February 12, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅக்போ யானையை விசேட பரிசோதனைக்குட்படுத்த திட்டம்

அக்போ யானையை விசேட பரிசோதனைக்குட்படுத்த திட்டம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ள அக்போ யானையை விசேட பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அக்போ யானையின் இடப்பக்க காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என வனஜீவராசிகள் திணைக்கள சுகாதார பணிப்பாளர் கால்நடை வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

கட்டுத்துப்பாக்கியினால் அக்போ யானயைின் இடது காலில் காயமேற்பட்டு, தற்போது 2 மாதங்களுக்கும் மேலாகின்றது.

இந்நிலையில், அனுராதபுரம் – திரப்பனை வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் யானைக்கு சிகிச்சை அளித்து உணவு வழங்கி வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles