அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் டிக்டொக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
150 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் பயன்படுத்தப்படும் மற்றும் சீன தொழில்நுட்ப நிறுவனமான பைட் டான்ஸுக்கு சொந்தமான இந்த செயலி சீன அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு உள்ளாகலாம் என கூறப்படுகிறது.