Thursday, June 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவறட்சி காரணமாக அதிக நெற்பயிர் சேதம் குருணாகலுக்கு

வறட்சி காரணமாக அதிக நெற்பயிர் சேதம் குருணாகலுக்கு

வறட்சி காரணமாக குருணாகல் மாவட்டத்திலேயே அதிக நெற்பயிர் சேதமடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியாக நிலவும் வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதவிபரங்களை மதிப்பிடுவதற்காக 25 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த குழுக்களின் தரவுகளுக்கு அமைய குருணாகல் மாவட்டத்தில் 19,388 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட பயிர் செய்கை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அந்த மாவட்டத்தில் 22,357 விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles