Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடற்படை வீரர் ஒருவர் கடலில் மூழ்கி பலி

கடற்படை வீரர் ஒருவர் கடலில் மூழ்கி பலி

ஹிக்கடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னம்கொட பிரதேச கடற் பகுதியில் நேற்றைய தினம் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீரர் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கபபட்டு ஆபத்தான நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுவன, தொடந்துவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles