Saturday, February 14, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநேர அட்டவணையின் அடிப்படையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை

நேர அட்டவணையின் அடிப்படையில் நீர் விநியோகிக்க நடவடிக்கை

வறட்சியினால் 18 பிரதேச மத்திய நிலையங்களுக்கு நீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 344 நீர் விநியோக மத்திய நிலையங்கள் காணப்படுவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தெற்கு பிராந்திய உதவி பொது முகாமையாளர் சமந்த குமார தெரிவித்துள்ளார்.

அவற்றில் 32 நீர் விநியோக மத்திய நிலையங்கள் அபாய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

குறித்த பிரதேசங்கள் வலயங்களாகப் பிரிக்கப்பட்டு நேர அட்டவணையின் அடிப்படையில் நீர் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சில பகுதிகளில் கொள்கலன் தாங்கி வாகனங்கள் மூலம் நீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles