ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
பெண்கள் அழகு நிலையம் நடத்தக்கூடாதுஇ வெளியில் காரில் பெண்கள் பயணம் செய்யும் போது ஆண் துணையுடன் தான் செல்ல வேண்டும் என பல்வேறு விதிகளை விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண்குழந்தைகள் 3 ஆம் வகுப்புக்கு மேல் கல்வியை தொடர கூடாது என தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகளை உடனே வீட்டுக்கு அனுப்புமாறு பள்ளிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
