நாட்டின் உண்மையான பொருளாதாரத்திற்கு நிதிக் கொள்கைகளை கொண்டு செல்வது இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் வட்டி விகிதங்கள் மேலும் குறைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்க வீதத்திற்கு ஏற்ப கொள்கை விகிதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகிறது.
மேலும் பணவீக்கத்தை 4 முதல் 6 சதவீதம் வரை அடைவதே மத்திய வங்கியின் இலக்கு என்றும் அவர் கூறினார்.
